ADDED : ஜூன் 11, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: வங்க கடலில் சூறாவளி, ராட்சத அலைகள் எழுவதால் ஜூன் 14 வரை ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறை தடை விதித்தது.
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்க கடலில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. ஜூன் 14 வரை கடலில் 9 முதல் 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ஜூன் 14 வரை ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் 2000 நாட்டுப்படகுகள், விசைப்படகுகளை மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தினர்.

