sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

/

எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

9


ADDED : ஆக 25, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 25, 2024 02:21 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:“இனம், மொழி, மாநிலம் காக்க, எந்நாளும் உழைப்பது தான், கருணாநிதிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றி,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள, 'கலைஞர் எனும் தாய்' நுால் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்நுாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினி பெற்றுக் கொண்டார்.

ஏற்புரை


அமைச்சர் உதயநிதி வரவேற்று பேசினார். குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், 'தி இந்து' குழுமம் இயக்குனர் என்.ராம் வாழ்த்திப் பேசினர். நுாலாசிரியரும் அமைச்சருமான வேலு ஏற்புரை வழங்கினார். சீதை பதிப்பகத்தின் கவுரா ராஜசேகர் நன்றி கூறினார்.

விழாவில், முதல்வர் பேசியதாவது:

அமைச்சர் வேலு எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பில் மொத்தமும் அடங்கி உள்ளது. கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல. தாயும் அவர் தான். வேலுவை போன்ற உடன் பிறப்புகளுக்கு தந்தையாக, தாயாக, தலைவராக இருந்தவர்.

'எ.வ.வேலு எதிலும் வல்லவர்' என, கருணாநிதி பாராட்டுவார். அவர் மனதில் நினைப்பதை, கண் அசைவின் வாயிலாக உணர்ந்து செய்பவர்களில், வேலு முதலிடத்தில் இருந்தார். எனக்கும் அதுபோல் தான் உள்ளார்.

ஆறாவது முறை தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளை ஒப்படைத்தேன். கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம், ஏறு தழுவுதல் மைதானம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் போன்றவை, அவரது திறமைக்கு சாட்சியாக உள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் தலையாய சாதனை, கருணாநிதி நினைவிடம். அதை பார்ப்போர் எல்லாரும் வியக்கும் அளவுக்கு அமைத்தார்.

கட்சியை பொறுத்தவரை, சிலைகள் துறை, மணிமண்டபங்கள் துறை, விழாக்கள் ஒருங்கிணைப்புத் துறை, சிறப்பு மலர் தயாரிப்பு துறை, புத்தகங்கள் அச்சிடும் துறை, நினைவுப் பரிசு வழங்கும் துறை என, ஏராளமான துறைகள் அவர் வசம் உள்ளன.

படத்தில் நடித்துள்ளார்; கூத்து கட்டுவார். எதிலும் வல்லவரான வேலு, எழுத்திலும் வல்லவர் என தற்போது நிரூபித்துள்ளார். கருணாநிதியை திருக்குறளுடன் இணைத்து, இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.

'மிசா' காலத்தில் நான் தாக்கப்பட்ட நிகழ்வு, இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதை படித்த போது உணர்ச்சி வசப்பட்டேன். இப்புத்தகத்தில் அமைச்சர் உதயநிதியும் இடம் பெற்றுள்ளார்.

உண்மையான நன்றி


கருணாநிதி வரலாற்றோடு, கட்சி வரலாறும் இருப்பது நுாலின் சிறப்பு. இந்திய வரைபடத்தில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்ற சிற்றுாரில் பிறந்த கருணாநிதிக்கு, இந்திய அரசு நாணயம் வெளியிட்டுள்ளது.

அவரது புகழை, பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதோடு, இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான், அவருக்கு நாம் காட்டும் உண்மையான நன்றி.

விழாவுக்கு வந்து, என்னை ஊக்கப்படுத்தும் வகையில், ரஜினி கூறிய அறிவுரையை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிட மாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

'பழைய மாணவர்களை சமாளிக்கும் முதல்வருக்கு ஹேட்ஸ் ஆப்'


“பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. தி.மு.க.,வில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள். அனைவரும் அசாத்தியமானவர்கள். அவர்களை சமாளித்த முதல்வருக்கு ஹேட்ஸ் ஆப்,” என, நடிகர் ரஜினி பேசினார்.அவர் பேசியதாவது:ஸ்டாலின் முதல்வரான பின், அவர் சந்தித்த தேர்தல் அனைத்திலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை காட்டுகிறது. ஒரு கட்சி தலைவர் மறைந்த பின், அடுத்து வரும் சந்ததியினர் அதை கட்டிக்காக்க எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை பார்த்திருப்பீர்கள்.அதை முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு ஆசிரியர், புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள். அதுவும் அசாத்தியமானவர்கள்.எல்லாரும், 'ரேங்க்' வாங்கி, வகுப்பை விட்டு போக மாட்டோம் என்கின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரணம் அல்ல. துரைமுருகன் என்ற ஒருவர் உள்ளார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்.
அவரிடம் ஏதேனும் ஒரு விஷயத்தை கூறினால், 'அப்படியா சந்தோஷம்' என்பார். நல்லா இருக்கு என்கிறாரா... ஏன்டா இப்படி செய்கிறீர்கள் என்கிறாரா என ஒன்றும் புரியாது. இவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு, 'ஹேட்ஸ் ஆப்!'வேலு எழுதிய புத்தகத்தின் தலைப்பு, கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்டது. புத்தகத்தின் விலை தான் அதிகம். 1,000 ரூபாய். விலையை குறைத்தால் எல்லாரும் படிப்பர்.ஒரு சிலர் தான் சமூக நன்மைக்காக பாடுபடுகின்றனர். அதில், கருணாநிதி முக்கியமானவர். அவர் சந்தித்த சோதனைகளை வேறு யாராவது சந்தித்திருந்தால் காணாமல் போயிருப்பர்.
விமர்சனம் மழை போல் இருக்க வேண்டும்; புயல் மாதிரி இருக்கக் கூடாது.ஆனால், கருணாநிதி ஆலமரம்; யாராலும் அசைக்க முடியாது. ஐந்தாண்டு ஆட்சியில் இல்லை என்றால் திண்டாடுகின்றனர். அவர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோது கட்சியை காப்பாற்றினார். கருணாநிதி விமர்சனம் எழுதியவரின் தராதரம் பார்ப்பார். நல்ல அறிவார்ந்து, சரியாக விமர்சித்து எழுதி இருந்தால், அவரிடமே விளக்கம் கூறுவார். இப்போதும் விமர்சனம் செய்கின்றனர். யார் மனதையும் நோகடிக்காதீர்கள்.
கருணாநிதி பேச்சு ஒரே ஸ்வரத்தில் இருக்கும். கேட்பவர்களிடம் சோகம், சிரிப்பு, துள்ளல் வரும். அது பேச்சுத் திறமை. சிவாஜி படம் அரசியல்வாதிகளை, அரசை விமர்சித்து எடுத்தது. அந்த கதை தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்தார். படம் முடிந்த பின், 'நமக்கும் நல்லது செய்ய ஆசை' எனக் கூறி பெருமூச்சு விட்டார். அதில் பல ஆயிரம் விஷயங்கள் இருந்தன.இவ்வாறு பேசினார்.








      Dinamalar
      Follow us