sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மகளிர் உரிமை தொகை வழங்குவதில் துரோகம்'

/

'மகளிர் உரிமை தொகை வழங்குவதில் துரோகம்'

'மகளிர் உரிமை தொகை வழங்குவதில் துரோகம்'

'மகளிர் உரிமை தொகை வழங்குவதில் துரோகம்'


ADDED : ஜூலை 09, 2024 06:38 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தி.மு.க., அரசு துரோகம் செய்துவிட்டதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சுமத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி, 'விழுப்புரம் மாவட்டத்தில் 60,000 பேர், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்' என, கூறியுள்ளார். தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரத்தில், வெறும் 60,000 பேருக்கு மட்டுமே, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என, அனைத்து துறைகளிலும் விழுப்புரம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது.

இங்கு குறைவான எண்ணிக்கையில் உரிமைத் தொகை வழங்குவது என்பது சமூக அநீதி; துரோகம். எனவே, விக்கிரவாண்டி மக்கள் இதைப் புரிந்து கொண்டு இடைத்தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us