sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.2,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரி மீது வழக்கு

/

ரூ.2,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரி மீது வழக்கு

ரூ.2,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரி மீது வழக்கு

ரூ.2,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரி மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை விடுவிக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, சுங்கத்துறை அதிகாரி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை எர்ணாவூரை சேர்ந்தவர் சுரேஷ்; தொழில் வர்த்தகர். 'மிர்த்திகாஸ்ரீ எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், சீனாவில் இருந்து, பீங்கான் தயாரிப்புக்கான பொருட்களை இறக்குமதி செய்துள்ளார். அந்த பொருட்கள், மே மாதம் சென்னை துறைமுகத்திற்கு வந்தன.

இந்த பொருட்களை விடுவிக்க, சென்னை ராஜாஜி சாலையில் செயல்படும், சுங்கத்துறை அலுவலக அதிகாரி மணீஷ் பாட்டீல், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது தொடர்பான, மொபைல் போன், 'ஆடியோ' ஆதாரத்துடன், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். டி.ஐ.ஜி., முருகன் தலைமையிலான அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us