sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் மீதான வழக்கு ஜுன் 12க்கு ஒத்திவைப்பு

/

அமைச்சர் மீதான வழக்கு ஜுன் 12க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான வழக்கு ஜுன் 12க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான வழக்கு ஜுன் 12க்கு ஒத்திவைப்பு


ADDED : ஏப் 27, 2024 02:40 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவர், 2006 ல் அமைச்சராக இருந்தபோது

வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தது. இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மாவட்ட பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார். அமைச்சர் தரப்பினரும், அமலாக்கத்துறை தரப்பினரும் ஆஜராகவில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் வழக்கறிஞர் மட்டும் ஆஜராகினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜுன் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us