ADDED : மே 28, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் முழுதும், 25ம் தேதி திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 5,463 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அவற்றில் 1,054 வாகனங்களில் விதிமீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
அதிக பாரம் ஏற்றிய 179; அதிக பயணியரை ஏற்றிய 150 உள்பட, 1,054 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சிறப்பு வாகன தணிக்கை வாயிலாக, 1.10 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மேலும், 34,835 பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆவடியில் ஒரு பள்ளி பஸ்சில், படிக்கட்டு உடைந்து விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற குறைபாடுள்ள பள்ளி பஸ்கள், பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னரே தகுதிச் சான்று ஆய்வுக்கு மீண்டும் உட்படுத்தப்படும். சோதனை தொடரும்.
- சண்முகசுந்தரம்
போக்குவரத்து துறை ஆணையர்