sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

/

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்


ADDED : ஜூலை 07, 2024 03:35 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அதை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்யப் பட்டது.

இரவு 10:45 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அம்மன் தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பக்தி பரவசத்தில் நுாற்றுக்கணக்கில் பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.

நேற்று முன்தினம் மாலை 5:00 மணியில் இருந்து, மேல்மலையனுாரிலும் லேசான மழை பெய்தது. இருந்தும், அதனை பொருட்படுத்தாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us