sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனுஷ்கோடியை கடல் நீர் சூழ்ந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு ஆபத்து

/

தனுஷ்கோடியை கடல் நீர் சூழ்ந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு ஆபத்து

தனுஷ்கோடியை கடல் நீர் சூழ்ந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு ஆபத்து

தனுஷ்கோடியை கடல் நீர் சூழ்ந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு ஆபத்து


ADDED : ஏப் 01, 2024 04:29 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடைகளை கடல் நீர் சூழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர். தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலைக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் நேற்று மதியம் 2:00 மணி முதல் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தை விட நீர் மட்டம் அதிகரித்தது.

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடல் நீர் தேங்கியதால் மீனவர்கள் குடிசைகள் அமைத்துள்ள உணவு ஓட்டல், சங்கு கடைகளை கடல்நீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் எழுந்த ராட்சத அலைகளால் தேசிய நெடுஞ்சாலையை கடல் நீர் கடந்து சென்றதில் 2 கி.மீ., சாலையில் சிறிய கற்கள் பரவியுள்ளது. அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை, உடனே வெளியேறிச் செல்லுமாறு மீனவர்கள் எச்சரித்தனர். இதனால் பீதியடைந்தவர்கள் காரில் ராமேஸ்வரம் வந்தனர்.

இதற்கு கடலில் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாடா காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலை நீடித்தால் தனுஷ்கோடி சாலை அரிக்கப்பட்டு சேதமடையும் அபாயம் உள்ளது

மே முதல் செப்., வரை வீசும் தென்மேற்கு பருவக்காற்று சீசனில் மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு தனுஷ்கோடியில் ராட்சத அலைகள் எழும்.

ஆனால் வழக்கத்தை விட முன்கூட்டியே கடல்நீர் ஊருக்குள் புகுந்தது அதிர்ச்சியாக உள்ளது என தனுஷ்கோடி மீனவர் உமயவேல் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us