sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அகதிக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

/

அகதிக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அகதிக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அகதிக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி


ADDED : ஆக 22, 2024 02:20 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மாவட்டம் மேலுார் அருகே திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில், மழையின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில், சிறுமி இறந்தார். அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து, நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. இயற்கைப் பேரிடரில், சிறுமி இறந்ததற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கூடாதா? மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us