sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட அளவில் குழு

/

போலீஸ் பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட அளவில் குழு

போலீஸ் பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட அளவில் குழு

போலீஸ் பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட அளவில் குழு


ADDED : ஆக 29, 2024 02:58 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மது விலக்கு வழக்குகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, மாவட்ட அளவில் குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யும்படி, உரிய அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததும், அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, அப்புறப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக, மாவட்டம் தோறும் எஸ்.பி., தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்குழுவில் கூடுதல் எஸ்.பி., அல்லது கூடுதல் துணை கமிஷனர் குழு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி., மதுவிலக்கு உதவி கமிஷனர், அரசு மோட்டார் வாகன பராமரிப்பு மற்றும் பணிமனை ஆட்டோ மொபைல் பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

இதற்கு முன், குழுவில் கலெக்டர் இருந்தார்; தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us