sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கிடைக்காது'

/

'தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கிடைக்காது'

'தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கிடைக்காது'

'தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கிடைக்காது'


ADDED : ஏப் 11, 2024 12:00 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால், தி.மு.க., கூட்டணிக்கு 'டிபாசிட்' கூட கிடைக்காது. இதனால், பிரதமரின் வருகை குறித்து, முதல்வர் ஸ்டாலின் புலம்பித் திரிகிறார்' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பா.ஜ., அரசு ஊழல் செய்ததாக பொய் குற்றச்சாட்டை உரக்கக் கூறுவதைவிட, முறையான ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் முறையிடுங்கள். நாங்கள் நேர்மையானவர்கள்; அத்தகைய குற்றச்சாட்டை வெளிப்படையாக எதிர்கொள்வோம்.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பேரிடர் நிவாரணத் தொகையில் இருந்துதான், மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதை, மத்திய நிதி அமைச்சர் தெளிவுபடுத்திய பின், மீண்டும் மீண்டும் அதே பொய்யை ஸ்டாலின் சொல்வது, அவர் வகித்து வரும் முதல்வர் பதவிக்கு அழகல்ல.

பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால், தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கூட கிடைக்காது. இதனால் பிரதமரின் வருகை குறித்து, ஸ்டாலின் புலம்பித் திரிகிறார்.

மீண்டும் அமைய உள்ள மோடி ஆட்சியில், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் நடந்து வரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறித்து, விசாரிக்க கமிஷன் அமைத்து, விசாரிக்கப்படும். அப்போது, தமிழகத்தை ஆட்கொண்டு வரும் மோடி அலையானது, ஸ்டாலின் பொய்களோடு சேர்த்து, தங்களின் வரலாற்றையும் வாரி சுருட்டிவிடும்.

இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us