sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'முதலீடுகள் குவிவதாக தி.மு.க., பொய் பிரசாரம்!'

/

'முதலீடுகள் குவிவதாக தி.மு.க., பொய் பிரசாரம்!'

'முதலீடுகள் குவிவதாக தி.மு.க., பொய் பிரசாரம்!'

'முதலீடுகள் குவிவதாக தி.மு.க., பொய் பிரசாரம்!'


ADDED : செப் 07, 2024 07:26 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் முதலீடுகள் குவிவதாக, தி.மு.க., அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த 2024- - 25 ஜூனுடன் முடிந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், 8,325 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழகம், ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனை, தமிழகம் இழந்து வருவதையே இது காட்டுகிறது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாநிலத்தின் தொழில் முதலீடு அதிகரித்து விட்டது போன்ற பொய்யான பிம்பத்தை, தி.மு.க., அரசு ஏற்படுத்த முயல்கிறது. ஆனால், கடந்த 39 மாதங்களில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு வெறும், 68,145 கோடி ரூபாய் மட்டுமே.

வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருவதாக பொய் பிரசாரம் செய்யாமல், உண்மையிலேயே முதலீடுகளை ஈர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும். இதுவரை தமிழகத்திற்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மையான நிலை என்ன என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

***






      Dinamalar
      Follow us