sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரையாடு கணக்கெடுப்பு 29ம் தேதி துவக்கம்

/

வரையாடு கணக்கெடுப்பு 29ம் தேதி துவக்கம்

வரையாடு கணக்கெடுப்பு 29ம் தேதி துவக்கம்

வரையாடு கணக்கெடுப்பு 29ம் தேதி துவக்கம்


ADDED : ஏப் 23, 2024 06:40 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம், கேரளாவில் ஒருங்கிணைந்த முறையில், நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள், ஏப்., 29ல் துவங்கும் என, வனத்துறை அறிவித்துள்ளது.

மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்க, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வரையாடுகளை பாதுகாப்பதற்கான புதிய திட்டத்துக்கு, 25 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான புதிய திட்டம், 2022ல் துவங்கப்பட்டது.

இதன்படி, வரையாடுகள் எண்ணிக்கை குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்; அதன் நடமாட்டம் உள்ள இடங்கள் பாதுகாக்கப்படும் என, அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகம், கேரளாவில் வரையாடுகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஏப்., 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என, தமிழக வனத்துறை அறிவித்துள்ளது.

தமிழக, கேரள எல்லையில் உள்ள புலிகள் காப்பகங்கள், காப்பு காடுகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

இதன்படி, குறிப்பிட்ட சில வரையாடுகளுக்கு, 'ரேடியோ காலர்' கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் நடமாட்டத்தை துல்லியமாக கணக்கிடவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us