sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை பொருள் புழக்கம்; தடுக்க கூடுதல் போலீஸ் நியமிக்க அறிவுரை

/

போதை பொருள் புழக்கம்; தடுக்க கூடுதல் போலீஸ் நியமிக்க அறிவுரை

போதை பொருள் புழக்கம்; தடுக்க கூடுதல் போலீஸ் நியமிக்க அறிவுரை

போதை பொருள் புழக்கம்; தடுக்க கூடுதல் போலீஸ் நியமிக்க அறிவுரை


ADDED : செப் 10, 2024 06:15 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதிய எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் குடிசைவாசிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட, நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லை' என கூறப்பட்டது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை நியமித்தது.

அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்தப் பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாக கூறப்பட்டது.

இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அட்வகேட் கமிஷனரின் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்கும்படியும், நான்கு இடங்களிலும் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், முதல் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போதைப் பொருள் இந்தப் பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாகவும், அங்குள்ள மது கடையை மூடவும், தெரு விளக்குகள் இல்லாததால், பெண்கள் பயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் பிரிவுகளில், 180 போலீசார் பணி ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை, திருப்தி அளிக்கவில்லை என, முதல் அமர்வு தெரிவித்தது.

போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கும் சூழலில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதிய எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்கவும், முதல் அமர்வு அறிவுறுத்தியது.

இதுகுறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 19க்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.






      Dinamalar
      Follow us