sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நகர கூட்டுறவு வங்கிகளை தரம் பிரிக்காமல் ஊதிய உயர்வு வழங்க ஊழியர்கள் வலியுறுத்தல்

/

நகர கூட்டுறவு வங்கிகளை தரம் பிரிக்காமல் ஊதிய உயர்வு வழங்க ஊழியர்கள் வலியுறுத்தல்

நகர கூட்டுறவு வங்கிகளை தரம் பிரிக்காமல் ஊதிய உயர்வு வழங்க ஊழியர்கள் வலியுறுத்தல்

நகர கூட்டுறவு வங்கிகளை தரம் பிரிக்காமல் ஊதிய உயர்வு வழங்க ஊழியர்கள் வலியுறுத்தல்


ADDED : பிப் 10, 2025 05:10 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; 'நகர கூட்டுறவு வங்கிகளை லாபத்தின் அடிப்படையில் தரம் பிரிக்காமல், அனைத்து ஊழியர்களுக்கும், 16 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், 127 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. கடைசியாக, 2022 ஜன., 1 முதல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.

ஆனால், இரண்டரை ஆண்டுகள் தாமதமாக, 2024 ஜூலை 31ல் ஊதிய மாற்றத்தை பதிவாளர் வெளியிட்டுஉள்ளார்.

இந்த ஆணையில் உள்ள தவறை சரிசெய்ய கோரிக்கை விடுத்த போது, அடுத்தடுத்து இரண்டு ஆணைகளில் பதிவாளர் அலுவலகம் செய்திருந்த தவறுகள் மட்டுமே திருத்தம் செய்யப்பட்டன.

எங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை என, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளன தலைவர் தமிழரசு, பொதுச்செயலர் சர்வேசன் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:

உதவி மேலாளர்களின் அடிப்படை சம்பள விகிதம் தவறானதாக இருப்பதால், 2022 ஜன., 1ல் 15 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பவருக்கு தற்போது, 9.75 சதவீதமாக குறைகிறது.

ஆண்டுக்கான படியை சேர்க்காததால் ஊதிய விகிதம் மிகவும் குறைகிறது. வீட்டு வாடகைப்படியும், நகர ஈட்டுப்படியும், 2022 முதல் நிலுவை தொகையில் உள்ளதை வழங்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள உரிமை, சலுகைகள் தொடரும் என, ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.

கடந்த 1991 முதல் தமிழகம் முழுதும் ஒரே ஊதியம் என, சீரமைக்கப்பட்டது. ஆனால், நஷ்டம் அடைந்துள்ள வங்கிகளுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கிடையாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வங்கிகளுக்கும், 10 சதவீத ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

வங்கிகள் லாபத்தில் இயங்கினால் 1 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்குவது, சுய உதவிக்குழுவினருக்கு 1 கோடி வரை கடன் வழங்கியிருப்பது, மொத்த வாராக்கடன், 5 சதவீதத்திற்குள் இருப்பது, நிகர வாராக்கடன் 1 சதவீதத்திற்கு கீழ் இருப்பது என, ஒவ்வொரு பிரிவுக்கு 1 சதவீதம் என தனியாக, 6 சதவீதம் ஊதிய உயர்வாக வழங்குகின்றனர்.

இந்த முறையில் வங்கிகளை தரம் பிரிக்காமல், அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக, 16 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை, பதிவாளருக்கு நான்கு முறை கடிதம் அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. மார்ச் 17ல் வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us