வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
ADDED : ஜூலை 28, 2024 04:19 AM
சென்னை: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்-கும் திட்டத்தின் கீழ், அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகை-யில், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை, 5 லட்சம் ரூபா-யில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை உத்தரவிட்டுள்ளது.
படித்து வேலையில்லாமல் ஏழ்மையில் உள்ள இளைஞர்கள், சுயதொழில் துவங்கி தொழில்முனைவேராக உருவெடுக்க, அவர்-களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
வர்த்தகம் சார்ந்த தொழில் துவங்க, திட்ட மதிப்பீட்டில் அதிகபட்-சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு மானியமாக, 25 சதவீதம் அல்லது அதிகபட்சம், 3.75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்
படுகிறது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு. பயனாளியின் குடும்ப ஆண்டு வருவான உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இந்த உச்சவரம்பு குறைவாக இருப்பதால், திட்டத்தில் பலர் பயன்பெற முடியவில்லை. எனவே, ஆண்டு வருமான உச்சவ-ரம்பை உயர்த்துமாறு, அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதைய-டுத்து உச்சவரம்பு, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சட்டச-பையில் சமீபத்தில் அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், உச்சவரம்பை 8 லட்சம் ரூபா-யாக உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த 2023 - 24ல், 2,538 இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்காக, 28.14 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.

