அனுமதியின்றி மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி இருவர் பலி
அனுமதியின்றி மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி இருவர் பலி
ADDED : ஜூன் 10, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்., கோட்டை படைத்தலைவியம்மன், கருக்குமடை ஐயனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி அரசு அனுமதியின்றி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின், படிப்படியாக அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
திடீரென காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரரான மதுரை அருகே சேக்கிப்பட்டி மணி மகன் சரண், 19, சிவகங்கை அருகே தேத்திப்பட்டி கிச்சன், 60, ஆகியோர் பலியாகினர். காளைகள் முட்டியதில், 13 பேர் காயமடைந்தனர்.

