ADDED : ஜூலை 03, 2024 11:39 PM
சென்னை:தமிழக அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த தேர்வுகளின் அறிவிக்கை, தேர்வு முடிவுகள் ஆகியவை குறித்து, அட்டவணை, ஆண்டின் துவக்கத்தில் வெளியிடும்.
பல தேர்வுகள் நடத்தப்படுவதில்லை; முடிவு வெளியிடுவதும் தாமதமாகும். இந்நிலையில், 13 தேர்வுகளின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, தேர்வர்களின் பார்வைக்காக, https://tnpsc.gov.in/Home.aspx என்ற இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இதில், வேளாண் உதவி இயக்குனர், சாலை ஆய்வாளர், மீன்வள சார் - ஆய்வாளர், 'குரூப் - 1சி' பதவிக்கான பிரதான தேர்வு, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கான, ஐந்து தேர்வுகளின் முடிவுகள், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.