sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல்: அமைச்சர் ராஜா

/

தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல்: அமைச்சர் ராஜா

தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல்: அமைச்சர் ராஜா

தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல்: அமைச்சர் ராஜா

6


ADDED : ஆக 21, 2024 02:58 AM

Google News

ADDED : ஆக 21, 2024 02:58 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:

தொழில் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களின்படி உற்பத்தியை துவங்கி, வேலைவாய்ப்பு உருவாவது வரை முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார். இதற்கென அதிகாரிகள் குழுவையும் நியமித்துஉள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முதல்வரின் வெளிநாட்டு பயணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 19 நிறுவனங்கள் இன்று உற்பத்தியை துவங்கவுள்ளன. இதன் வாயிலாக, 17,616 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகி உள்ளது.

ஒட்டு மொத்தமாக, 68,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் கிடைத்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளாக கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நிலம் எடுப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இனி, மத்திய அரசு அடுத்தகட்ட பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது. அதனால், தொழில்வளம் பெருகி வருகிறது.

முதல்வரின் அமெரிக்க பயணம் வாயிலாக, தமிழகத்தில் இதுவரை கால் பதிக்காத நிறுவனங்களும், இங்கு தொழில் துவங்கஉள்ளன.

மத்திய அரசு எந்த ஒரு இக்கட்டான சூழலை திணித்தாலும், அதையெல்லாம் தகர்த்தெறிந்து, முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

'முடியாது முடியாது!'


பேட்டியின் போது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ராஜா, ''அண்ணாமலை கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. வேறு ஏதாவது சீரியசான கேள்வி இருந்தால் மட்டுமே கேட்க வேண்டும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us