sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு

/

மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு

மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு

மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு


ADDED : ஆக 22, 2024 02:12 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை, மூன்று முறை எழுதி தேர்ச்சி பெறாத, 50 வயதான மாற்றுத்திறனாளிகளுக்கு, மீண்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் பலர், 40வது வயதில் தான் பணியில் சேர்கின்றனர். அவர்களின் பதவி உயர்வுக்காக, அந்தந்த துறைகளால் நடத்தப்படும் துறை தேர்வுகளில், பெரும்பாலான பார்வைத்திறன், கேட்கும் திறன் குறைந்த, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளால் தேர்ச்சி பெற முடிவதில்லை.

அவர்களில் தகுதியானோரை பணி வரன்முறை செய்து, பதவி உயர்வு வழங்கும் வகையிலும், அரசுப் பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டின்படியும், நான்காவது முறையாக தேர்வெழுதுவதில் இருந்து விலக்களித்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலர் சிஜி தாமஸ் வைத்தியன் உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us