sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷனில் தேங்காய், கடலை எண்ணெய் விற்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

/

ரேஷனில் தேங்காய், கடலை எண்ணெய் விற்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

ரேஷனில் தேங்காய், கடலை எண்ணெய் விற்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

ரேஷனில் தேங்காய், கடலை எண்ணெய் விற்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

2


ADDED : ஆக 07, 2024 02:17 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:17 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:'கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்; ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி, சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில், கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, பனை மற்றும் தென்னை மரங்களில், கள் இறக்கி விற்பனை செய்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

விவசாயிகள், இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே, தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை, கேரளாவில் விற்க தடை செய்யக்கூடாது. கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளுடன், கள் இறக்கி விற்கும் விவசாயிகளை இணைத்து, அவமானப்படுத்தி வழக்கு போடுவதை, போலீசார் தவிர்க்க வேண்டும்.

பாமாயிலை உட்கொள்வதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, ரேஷனில் விற்கப்படுகிறது.

இதற்கு பதிலாக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், எள், நிலக்கடலையில் இருந்து, எண்ணெய் தயாரித்து விற்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு செவிசாய்க்காவிட்டால், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.






      Dinamalar
      Follow us