ADDED : ஜூன் 25, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஓலைகுடாவை சேர்ந்தவர் மீனவர் ஜெயபாலன் 75.
இவர் நேற்று மிதவை படகில் துாண்டிலில் கணவாய் மீன் பிடிக்க நடுக்கடலுக்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலையில் படகு சிக்கியதால் கடலுக்குள் மூழ்கி மாயமானார். அப்பகுதியில் மீன்பிடித்த பிற மீனவர்கள் வெகு நேரம் தேடிய நிலையில் நேற்று மாலை ஜெயபாலன் உடலை மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர். மரைன் போலீசார் விசாரித்தனர்.

