sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர்கள் இந்திய எல்லையை தாண்ட வேண்டாம்: மீன்துறை எச்சரிக்கை

/

மீனவர்கள் இந்திய எல்லையை தாண்ட வேண்டாம்: மீன்துறை எச்சரிக்கை

மீனவர்கள் இந்திய எல்லையை தாண்ட வேண்டாம்: மீன்துறை எச்சரிக்கை

மீனவர்கள் இந்திய எல்லையை தாண்ட வேண்டாம்: மீன்துறை எச்சரிக்கை


ADDED : ஜூன் 26, 2024 08:02 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : நாகை மீனவர் படகு மோதியதில் இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்ததன் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வங்கக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் படகு இலங்கை கடற்படை ரோந்து படகு மீது மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று மாலை ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி கூறியதாவது:

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு நகலை கடலுக்கு எடுத்து செல்ல வேண்டும். ஆதார் நகலை மீன்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றனர்.






      Dinamalar
      Follow us