sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரம், வாள் வீச்சு போட்டி வீராங்கனையருக்கு அரசு உதவி

/

கேரம், வாள் வீச்சு போட்டி வீராங்கனையருக்கு அரசு உதவி

கேரம், வாள் வீச்சு போட்டி வீராங்கனையருக்கு அரசு உதவி

கேரம், வாள் வீச்சு போட்டி வீராங்கனையருக்கு அரசு உதவி


ADDED : ஜூலை 11, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வெளிநாடுகளில் கேரம், வாள் வீச்சு போட்டிகளில் பங்கேற்க உள்ள வீராங்கனையருக்கு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வாயிலாக நிதி வழங்கி உதவினார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், நவ., 10 முதல் 17ம் தேதி வரை உலக கேரம் போட்டி நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க, தமிழகத்தை சேர்ந்த வீராங்கனையரான நாகஜோதி, காசிமா, மித்ரா மற்றும் பயிற்சியாளர் மரியா இருதயம் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களின் செலவுக்காக, தலா 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வாயிலாக, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.

மேலும், வரும் 16 முதல் 19ம் தேதி வரை நியூசிலாந்தில் நடக்க உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, ஜாய்ஸ் அஷிதாவுக்கு செலவு தொகையாக, 2 லட்சம் ரூபாய்காசோலை என, மொத்தம் 8 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை உதயநிதி வழங்கினார்.

நிகழ்வில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us