ADDED : ஜூன் 23, 2024 05:27 AM

சென்னை : 'ஐந்து மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்று மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்; அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரி பகுதியில் 5 செ.மீ., மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

