sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாய்கள் இறக்குமதிக்கு தடை விவகாரம் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

/

நாய்கள் இறக்குமதிக்கு தடை விவகாரம் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

நாய்கள் இறக்குமதிக்கு தடை விவகாரம் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

நாய்கள் இறக்குமதிக்கு தடை விவகாரம் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜூன் 05, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மூர்க்க குணமுள்ள நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் விவகாரத்தில், வரும் 14 வரை, எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மூர்க்கத்தனமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்யவும், விற்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து, கடந்த மார்ச் 12ல், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி, வெளிநாட்டு இன நாய்களான, 'பிட் புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், ராட் வைலர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல் டாக், போர்போல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட், காகசியன் ஷெப்பர்ட், தெற்காசிய ஷெப்பர்ட், உல்ப் டாக்ஸ்' உள்ளிட்ட நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து, நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றங்கள், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன.

அந்த வரிசையில், சென்னை உயர் நீதிமன்றமும், கடந்த மார்ச் 29ல், மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்தது.

இதையடுத்து, மனித உயிருக்கு ஆபத்தாக, மூர்க்கத்தனமாக இருக்கும் நாய்களுக்கு தடை விதிப்பதற்காக, அவற்றை வகைப்படுத்துவது குறித்து, பொது மக்களின் கருத்துக்களை, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கோரியுள்ளது.

இதற்கான அறிவிப்பை, கடந்த மே 2ல் வெளியிட்டது. அதில், ஜூன் 1க்குள் மக்கள் தங்களை கருத்துக்களை தெரிவிக்கலாம்; அதுவரை தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'பொது மக்களிடம் கருத்து கேட்பதுசட்டப்படி தவறானது; நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்து தான் கருத்து கேட்கும் நடவடிக்கையை துவங்க வேண்டும்' என, இந்திய கென்னல் கிளப் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''கருத்து கேட்கும் நடைமுறை தொடரலாம். ஆனால், ஜூன் 14 வரை இந்த விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது,'' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us