sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காஞ்சி, சேலம், விழுப்புரத்தில் பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு; சிறப்பு புலனாய்வு பிரிவு துவங்க முடிவு

/

காஞ்சி, சேலம், விழுப்புரத்தில் பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு; சிறப்பு புலனாய்வு பிரிவு துவங்க முடிவு

காஞ்சி, சேலம், விழுப்புரத்தில் பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு; சிறப்பு புலனாய்வு பிரிவு துவங்க முடிவு

காஞ்சி, சேலம், விழுப்புரத்தில் பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு; சிறப்பு புலனாய்வு பிரிவு துவங்க முடிவு

14


ADDED : மார் 04, 2025 07:31 AM

Google News

ADDED : மார் 04, 2025 07:31 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவதால், காஞ்சிபுரம், சேலம் மற்றும் விழுப்புரத்தில், சிறப்பு புலனாய்வு பிரிவின் மூன்று யூனிட்டுகளை துவக்குவதற்கான பணியில், போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க, கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., எனப்படும், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு, ஏ.டி.எஸ்., எனப்படும், பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் செயல்படுகின்றன. இப்பிரிவு போலீசாருடன், காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் இணைந்து செயல்படுகின்றனர்.

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், தடை செய்யபப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, மத்திய, மாநில போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவது தெரியவந்துள்ளது.

இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும், பயங்கரவாத செயல்களை முறியடிக்கவும், அது தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், சிறப்பு புலனாய்வு பிரிவுகளை ஏற்படுத்தும் பணி நடக்கிறது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மத பழமைவாதம் எனப்படும், பயங்கரவாத செயலுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், காஞ்சிபுரம், சேலம் மற்றும் விழுப்புரத்தில், 2.38 கோடி ரூபாயில், சிறப்பு புலனாய்வு பிரிவின் மூன்று யூனிட்டுகளை அமைக்கும் பணி நடக்கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us