எம்.பி., வெங்கடேசன் இழிவாக பேசுவது அறிவான செயலா? *ஆதீனங்கள் கண்டனம்
எம்.பி., வெங்கடேசன் இழிவாக பேசுவது அறிவான செயலா? *ஆதீனங்கள் கண்டனம்
ADDED : ஜூலை 04, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சமீபத்தில் லோக்சபாவில் பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், 'செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தன் அந்தப்புரத்தில் எத்தனை நுாறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா? அந்தச் செங்கோலை இந்த அவையில் வைத்திருப்பதன் வாயிலாக, இந்த நாட்டு பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று ஆவேசமாக பேசினார். மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பெருமைமிக்க தமிழகத்தைச் சேர்ந்த, அதுவும் மீனாட்சி செங்கோல் பெற்று ஆட்சி புரியும் மதுரையைச் சேர்ந்த எம்.பி., தமிழக மன்னர்களையே அவமதிப்பதா என ஆதீனங்களும், ஆன்மிகவாதிகளும் கொதித்து கொந்தளிக்கின்றனர்.