sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூணாறு ரோட்டில் நிலச்சரிவு போக்குவரத்து துண்டிப்பு

/

மூணாறு ரோட்டில் நிலச்சரிவு போக்குவரத்து துண்டிப்பு

மூணாறு ரோட்டில் நிலச்சரிவு போக்குவரத்து துண்டிப்பு

மூணாறு ரோட்டில் நிலச்சரிவு போக்குவரத்து துண்டிப்பு


ADDED : ஜூலை 31, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை - மூணாறு வழித்தடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டதால், நேற்று காலை போக்குவரத்து பாதித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில், திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரள மாநிலம் மூணாறு செல்லும் ரோட்டில், எட்டாம் மைல் உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உடுமலையிலிருந்து, மறையூர், மூணாறு செல்லும் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள், பாதி வழியில் நிறுத்தப்பட்டன. கேரளா மாநில அதிகாரிகள், ரோட்டில் சரிந்த பாறை, மண்ணை அகற்றிய பின், மதியம், 12:00 மணிக்கு மேல், வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.






      Dinamalar
      Follow us