sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமநாதபுரத்தில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ்., பெயரில் பல மனுக்கள் எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி

/

ராமநாதபுரத்தில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ்., பெயரில் பல மனுக்கள் எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி

ராமநாதபுரத்தில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ்., பெயரில் பல மனுக்கள் எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி

ராமநாதபுரத்தில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ்., பெயரில் பல மனுக்கள் எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி


ADDED : மார் 28, 2024 01:42 AM

Google News

ADDED : மார் 28, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:''முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பழுத்த அரசியல் அனுபவம் மிக்கவர். ராமநாதபுரம் தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே ஓ.பன்னீர் செல்வம் பெயரில் பல வேட்பாளர்களை மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளனர். மனு பரிசீலனையிலேயே உண்மை தெரிந்துவிடும்,'' என, தேனியில் எம்.பி., ரவீந்திரநாத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றால் அ.தி.மு.க., காப்பாற்றப்படும் என்பதால் நான் போட்டியிடாமல் உள்ளேன். வாய்ப்பு இருந்தால் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவேன். தினகரன் பல்வேறு உதவிகளை தேனி தொகுதியில் செய்தவர்.

அனைவருக்கும் பரிச்சயமானவர். தினகரனும், நானும் வேறு இல்லை.

பழனிசாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்து கொண்டார். ராமநாதபுரத்திலும், தேனியிலும் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.






      Dinamalar
      Follow us