sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

27ம் தேதி பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு

/

27ம் தேதி பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு

27ம் தேதி பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு

27ம் தேதி பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு


ADDED : ஆக 24, 2024 01:28 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில், வரும் 27ம் தேதி நடக்க உள்ள, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சில் பங்கேற்கும்படி, 100 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு, நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம், 2023 ஆக., 31ல் காலாவதியானது.

அடுத்தக்கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சை விரைந்து துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டன.

இந்நிலையில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில், 27ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது.

இதில், தலா ஒருவர் பங்கேற்குமாறு, 100 தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us