sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எத்தனால் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்த அனுமதி

/

எத்தனால் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்த அனுமதி

எத்தனால் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்த அனுமதி

எத்தனால் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்த அனுமதி


ADDED : ஆக 30, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 30, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தானியம் சார்ந்த எத்தனால் தயாரிப்பு நிலையங்களுக்கு 23 லட்சம் டன் அரிசியை விற்பனை செய்ய, இந்திய உணவுக் கழகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு ஜூலையில் உள்நாட்டு சந்தையில் அரிசி விலை அதிகரிப்பதாக கூறி, எத்தனால் உற்பத்திக்கு அரிசி வழங்க அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது அரிசி கையிருப்பு 540 லட்சம் டன்னுக்கும் அதிகமாக உள்ளதால், அடுத்த அறுவடைக் காலத்தில் அரிசி கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, தற்போது இருப்பை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, தானியம் சார்ந்த எத்தனால் தயாரிப்பு நிலையங்கள், இம்மாதம் துவங்கி, வரும் அக்டோபர் மாதம் வரை மின்னணு ஏல முறையில் அதிகபட்சமாக 23 லட்சம் டன் வரை அரிசி கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எத்தனால் உற்பத்தியில் கரும்புச்சாறு மற்றும் சர்க்கரைப் பாகு ஆகியவற்றை பயன்படுத்த, கடந்த டிசம்பரில் விதித்திருந்த தடையையும், அரசு நீக்கியுள்ளது.

இதையடுத்து, நடப்பு எத்தனால் வினியோக ஆண்டு, அதாவது நடப்பாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு அக்டோபர் வரை, இவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us