sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

/

நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்


ADDED : ஆக 15, 2024 04:34 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சந்திரகாசன்,70. இவருக்கு சொந்தமான விசைப்படகில், புஷ்பவனத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்,70, ராஜேஷ்,26, பன்னீர்செல்வம்,50, வேல்முருகன்,36 ஆகிய நால்வர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில் 10 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 2.00 மணியளவில், அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட 2 பைபர் படகுகளில் அப்பகுதிக்கு வந்த 6 கடற்கொள்ளையர்கள், நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து தாக்கி, மீனவர் படகில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை பறித்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை கரைக்கு திரும்பினர். காயமடைந்த நான்கு மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து வேதாரண்டம் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us