sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கள்ளச்சாராயம் கடத்தலை தடுப்பதில் போலீஸ் தோல்வி!' -

/

'கள்ளச்சாராயம் கடத்தலை தடுப்பதில் போலீஸ் தோல்வி!' -

'கள்ளச்சாராயம் கடத்தலை தடுப்பதில் போலீஸ் தோல்வி!' -

'கள்ளச்சாராயம் கடத்தலை தடுப்பதில் போலீஸ் தோல்வி!' -


ADDED : ஜூலை 10, 2024 10:15 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதை தடுப்பதில், தமிழக காவல் துறை தோல்வி அடைந்து விட்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி, மதகடிப்பட்டில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த, விக்கிரவாண்டியை சேர்ந்த ஏழு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க, தமிழக காவல் துறை தவறிவிட்டது என்பதை, இந்நிகழ்வு காட்டுகிறது.

கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல் துறையும் முற்றிலுமாக தோல்வி அடைந்து விட்டன. இனியாவது புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us