sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேரும் ரவுடிகள்: கார்த்தி எம்.பி.,

/

பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேரும் ரவுடிகள்: கார்த்தி எம்.பி.,

பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேரும் ரவுடிகள்: கார்த்தி எம்.பி.,

பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேரும் ரவுடிகள்: கார்த்தி எம்.பி.,

1


ADDED : ஜூலை 20, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 03:11 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : ''சமீப காலமாக அரசியல் கட்சிகளில் ரவுடிகள் இல்லை. ரவுடிகள் தான் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும் புதிதாக கட்சியில் சேருபவர் குறித்தும், அவருக்கு பதவி வழங்கும் போது அவரது பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும். பல கொலை வழக்குகளில் உண்மைகளை மறைக்கும் நோக்கத்துடன் போலீசார் என்கவுன்டர் செய்வதாக சந்தேகம் எழுகிறது. கூலிப்படை மூலம் நடக்கும் கொலைகளை போலீசாரால் தடுக்க முடியும். கூலிப்படை மூலம் நடக்கும் கொலைக்கு போலீசார் பதில் சொல்ல வேண்டும்

தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணத்தை திரும்ப கொடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தால் நல்ல தீர்ப்பாக இருந்திருக்கும். இனிமேல் வாங்க வேண்டாம் என கூறியதை ஏற்க முடியாது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து எப்படி தண்ணீர் பெற வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை வாரியம் தான் அறிந்து செயல்பட வேண்டும். தற்போது நல்ல மழை பெய்வதால் கர்நாடகா அரசு தானாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு


மின் வாரியத்தை சீரமைக்க வேண்டும். மின்வாரியம் மீது கடன் சுமை உள்ளது. இக்கடன் சுமையை குறைக்கும் வரை மின்வாரியத்தை சீரமைக்க முடியாது. காங்., தொண்டர்களை மாநில தலைவர் சந்திப்பது நல்ல விஷயம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

நகராட்சி கமிஷனரை கடிந்த எம்.பி.,

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம் மருதுபாண்டியர்நகர் நகராட்சி பூங்காவை புனரமைக்க ரூ.பல லட்சம் செலவிட்டது தொடர்பாக தி.மு.க., நகராட்சி தலைவர், துணை தலைவர்கள் இடையே மோதல் போக்கு உருவானது. கவுன்சில் கூட்டத்தில் கார்த்தி எம்.பி.,யை தரக்குறைவாக பேசியதை கண்டித்து காங்., கவுன்சிலர் விஜயகுமார் போராட்டம் நடத்தினார். அதிருப்தியடைந்திருந்த கார்த்தி எம்.பி., நேற்று நகராட்சி பூங்காவை பார்வையிட்டார். பூங்காவை புனரமைக்க ரூ.பல லட்சம் செலவு செய்ததற்கான கணக்குகள், நகராட்சி வருவாய், செலவு கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என கமிஷனர் கிருஷ்ணராமை கடிந்து கொண்டார்.








      Dinamalar
      Follow us