sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்டட கள ஆய்வை சரிபார்க்க பதிவுத்துறை 4 மாதம் 'கெடு'

/

கட்டட கள ஆய்வை சரிபார்க்க பதிவுத்துறை 4 மாதம் 'கெடு'

கட்டட கள ஆய்வை சரிபார்க்க பதிவுத்துறை 4 மாதம் 'கெடு'

கட்டட கள ஆய்வை சரிபார்க்க பதிவுத்துறை 4 மாதம் 'கெடு'


ADDED : மே 16, 2024 01:32 AM

Google News

ADDED : மே 16, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டட மதிப்பு கள ஆய்வு செய்ததை, மேலதிகாரிகள் சரிபார்க்கும் பணிகளை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு:

சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டட மதிப்புகளை கள ஆய்வு வாயிலாக, சார் - பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் அளிக்கும் கள ஆய்வு அறிக்கைகளை, மாவட்ட பதிவாளர், உதவி ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்கள் சரிபார்க்க வேண்டும்.

இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்காமல், பல அதிகாரிகள் கிடப்பில் போடுவதாக புகார்கள் வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நிகழ்வில், இது தொடர்பான கோப்புகளை, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, கட்டட கள ஆய்வு விபரங்களை, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள், நான்கு மாதங்களுக்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்கள் இதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us