sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.100 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு

/

ரூ.100 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு

ரூ.100 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு

ரூ.100 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு

1


ADDED : பிப் 27, 2025 12:16 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிடம் இருந்து, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை மந்தைவெளியில் வசிப்பவர் சந்தீப்குமார் சவுராசியா. இந்திய விமானப் படையின் முன்னாள் ராணுவ வீரான இவர், சுங்கத் துறையில் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் மதிப்பீட்டாளராக, சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வந்தார்.

ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக, இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து, டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 2024, மே மாதம், அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, சந்தீப்குமார் சவுராசியா, ஓராண்டுக்கு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவர், லஞ்சப் பணத்தில் பீஹார் மாநிலம், பாட்னாவில் அதிகமாக சொத்து வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், சந்தீப்குமார் சவுராசியா மீது, பாட்னா சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், இவர் வருமானத்திற்கு அதிகமாக, 78.81 சதவீதம் அளவுக்கு சொத்து வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அது தொடர்பான வழக்கிலும் சந்தீப்குமார் சவுராசியாவை கைது செய்ய உள்ளனர்.






      Dinamalar
      Follow us