ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
UPDATED : ஏப் 07, 2024 01:46 PM
ADDED : ஏப் 07, 2024 10:56 AM

திருநெல்வேலி: சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த, 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ., உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
சோதனை
திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

