sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறை ஆப்பரேஷன் வெற்றி செந்தில்பாலாஜி மகிழ்ச்சி

/

சிறை ஆப்பரேஷன் வெற்றி செந்தில்பாலாஜி மகிழ்ச்சி

சிறை ஆப்பரேஷன் வெற்றி செந்தில்பாலாஜி மகிழ்ச்சி

சிறை ஆப்பரேஷன் வெற்றி செந்தில்பாலாஜி மகிழ்ச்சி

1


ADDED : ஜூன் 05, 2024 02:26 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 02:26 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் வேலை பார்ப்பதில் கில்லாடி என்பதை, ஈரோட்டில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலின்போது நிரூபித்தார். இதனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளை அவரிடம் ஒப்படைக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், அவரிடம் இருந்து தேர்தல் தொடர்பான ஆலோசனை பெற்ற தி.மு.க., தலைமை, அவருடைய தீவிர ஆதரவாளரான கணபதி ராஜ்குமாரை கோவை லோக்சபா தொகுதிக்கான வேட்பாளராக்கியது. இதனால், கணபதி ராஜ்குமார் வெற்றிக்காக செந்தில்பாலாஜி பாடுபட்டார்.

அதேபோல கரூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதிமணிக்காகவும் தன்னுடைய ஆதரவாளர்கள் வாயிலாக தேர்தல் பணி யாற்றினார். இருவரும் வெற்றி பெற்ற செய்தி அறிந்து, செந்தில்பாலாஜிமகிழ்ந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us