ADDED : ஜூன் 01, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, பிரதமர் வருகை பரபரப்புக்கு இடையிலும் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்கு புறப்பட தயாராக இருந்த சார் - பதிவாளர் அப்ரோஸ் என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரது பேன்ட் பாக்கெட்டில், 1 லட்சம் ரூபாய் இருந்தது.
இந்த பணத்துக்கு அவரிடம் எந்த கணக்கும் இல்லை. அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது, இது தொடர்பாக அப்ரோஸ், மோகன்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

