sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சீறிய திருமாவளவன் முதல்வரை பார்த்ததும் சிறுத்து விட்டார்'

/

'சீறிய திருமாவளவன் முதல்வரை பார்த்ததும் சிறுத்து விட்டார்'

'சீறிய திருமாவளவன் முதல்வரை பார்த்ததும் சிறுத்து விட்டார்'

'சீறிய திருமாவளவன் முதல்வரை பார்த்ததும் சிறுத்து விட்டார்'


ADDED : செப் 17, 2024 10:25 PM

Google News

ADDED : செப் 17, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''திருமாவளவன், 'மது ஒழிப்பு மாநாடு நடத்துவோம், ஆட்சியில் பங்கு கேட்போம்' என்று, சிறுத்தையாக ஆரம்பித்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்ததும், சிறுத்து போய் விட்டார்,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ.,வினர், நேற்று மாநிலம் முழுதும் ரத்தன தான முகாம், மருத்துவ முகாம், அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சென்னை தி.நகர், கமலாலாயத்தில் உள்ள கட்சியினருக்கு, மூத்த நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்ட பின், தமிழிசை அளித்த பேட்டி:

திருமாவளவன், 'மது ஒழிப்பு மாநாடு நடத்துவோம், ஆட்சியில் பங்கு கேட்போம்' என்று, சிறுத்தையாக ஆரம்பித்து விட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்ததும், சிறுத்து போய் விட்டார். தி.மு.க.,வினரை மேடையில் வைத்து கொண்டு, மது விலக்கு மாநாட்டை எப்படி நடத்த முடியும். மாநாட்டிற்கு, மதுபான அதிபர்கள் தான் நன்கொடையாளர்கள்.

நடிகர் விஜய் கட்சி துவங்கும் முன், திராவிட சாயலில் பயணிப்பது தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் தான் வர வேண்டும். விஜய் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது, போகப் போகத்தான் தெரியும். தமிழகத்தில் எதிர்மறை அரசியலை நிலைநிறுத்தியது தி.மு.க., தான். பா.ஜ., நேர்மறை அரசியலை செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us