sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாம்பு பிடி தன்னார்வலர் பாம்பு கடித்து இறந்தார்

/

பாம்பு பிடி தன்னார்வலர் பாம்பு கடித்து இறந்தார்

பாம்பு பிடி தன்னார்வலர் பாம்பு கடித்து இறந்தார்

பாம்பு பிடி தன்னார்வலர் பாம்பு கடித்து இறந்தார்

3


ADDED : ஏப் 14, 2024 04:53 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 04:53 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பாம்பை பிடித்த தன்னார்வலர், பாம்பு கடித்து இறந்தார்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல்சமத் மகன் உமர்அலி, 36; பாம்புபிடி தன்னார்வலரான இவர் கடந்த ஒன்றரை ஆண்டாக வனம் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் வீடுகளில் புகும் பாம்புகளை பிடித்து காப்பு காட்டில் விட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் முத்தையா நகரில் ஒரு வீட்டில் விஷ பாம்பு புகுந்தது. அதனை உமர் அலி தீயணைப்புதுறை உதவியுடன் பிடித்து டப்பாவில் அடைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு, உமர் அலியை கடித்தது.

உடன் உமர் அலியை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இறந்த உமர்அலிக்கு பரகத்நிஷா என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர்.

பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us