ADDED : ஆக 17, 2024 02:17 AM

சென்னை: தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
1முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கித் தந்த முப்பெரும் விழா, செப்., 17ல், சென்னையில் எழுச்சி மிகுந்த விழாவாக நடத்தப்படும்
2தமிழகம் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும். தெருமுனைப் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். கொடிக்கம்பங்களை புதுப்பிக்க வேண்டும்
3'உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்ற கருணாநிதியின் வழியில் மாநில உரிமைககளை காத்திடுவோம். தன் நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தால், இந்திய ஜனநாயகத்தை காக்கிற துாணாகத் திகழ்ந்த கருணாநிதியின் புகழைப் போற்றுகிற வகையில், 100 ரூபாய் நாணயம் வெளியிட முன்வந்த மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்
4அதே வேளையில், தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் வழங்காததுடன், முறையான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாரபட்சம் காட்டுவதை வழக்கமாக வைத்து, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மத்திய பா.ஜ., அரசை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

