sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் மாநிலம் முழுதும் செப்டம்பரில் அமல்

/

காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் மாநிலம் முழுதும் செப்டம்பரில் அமல்

காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் மாநிலம் முழுதும் செப்டம்பரில் அமல்

காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் மாநிலம் முழுதும் செப்டம்பரில் அமல்


ADDED : ஜூலை 06, 2024 02:18 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

'டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், செப்டம்பர் முதல், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வனம், வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோர், ஆங்காங்கே பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதைத் தடுக்கும் விதமாக, மலைப்பகுதி களில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கு, சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரும்பப் பெற்ற மதுப்பாட்டில்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்க உள்ளது என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் நாளொன்றுக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், 'ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் வரை விற்கப்படுகின்றன. முதற்கட்டமாக மலைவாசஸ்தலங்களில், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடலுார், அரியலுார், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில், வரும் 15ம் தேதி முதல் காலி மதுப்பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. செப்டம்பர் முதல், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, ஆக.,7க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us