ADDED : மே 03, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் 27. இவர், மனைவி மற்றும் நண்பர்களுடன், நேற்று முன்தினம் மாலை, கோவளம் புளூ பீச் கடற்கரைக்கு வந்தார்.
அனைவரும் கடலில் குளித்தபோது, கார்த்திக் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் அவரை, மயங்கிய நிலையில் மீட்டனர்.
திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
கேளம்பாக்கம் போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.