சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் களத்தில் 10 தனிப்படை, சைபர் கிரைம் குழு
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் களத்தில் 10 தனிப்படை, சைபர் கிரைம் குழு
UPDATED : ஜூலை 19, 2025 10:27 AM
ADDED : ஜூலை 18, 2025 11:58 PM
திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அருகே, 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை, பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், பள்ளி முடிந்து புத்தக பையுடன் தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவர் துாக்கி சென்று, மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்து ஏழு நாட்களான நிலையில், 'சிசிடிவி' பதிவுகள் இருந்தும், குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை, பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர். 'இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்' என, போலீஸ் தரப்பில் உறுதி சொல்லப்பட்டதால், கலைந்து சென்றனர்.
தீவிர வலைவீச்சு
சிறுமியை வன்கொடுமை செய்த காமுகன் முகம், ஆரம்பாக்கம் ரயில் நிலைய, 'சிசிடிவி கேமரா'வில் பதிவாகி உள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் மேற்பார்வையில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., தேவராணி தலைமையில், 10 தனிப்படைகள் மற்றும் சைபர் கிரைம் குழுவினர் களம் இறங்கியுள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்த மர்ம நபருக்கு மொபைல் போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது, அந்த நபர் மொபைல் போனில் பேசியபோது, அவனது பிடியில் இருந்து சிறுமி தப்பியோடினார்.
மர்ம நபர் மொபைல் போனில் ஹிந்தியில் பேசியதாக சிறுமி தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, சுற்றியுள்ள தொழிற்சாலை மற்றும் கடைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களிடம், மர்ம நபரின் படத்தை காண்பித்து, தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
மர்ம நபர்
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மொபைல் போனில் மர்ம நபர் பேசியதால், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மொபைல் போன் டவரில் பதிவான எண்களை பட்டியலிட்டு, சைபர் கிரைம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த மர்மநபரின் முகத்தை, ஆதாரில் பதிவானவர்களின் முகங்களோடு ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
'அவனை சுட்டுக் கொல்லுங்க'
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து, அவரது தாய் கூறியதாவது:
இவ்வாறு அவர் கூறினார்.

