sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அங்கீகாரம் புதுப்பிக்காத 10,000 தனியார் பள்ளிகள்

/

அங்கீகாரம் புதுப்பிக்காத 10,000 தனியார் பள்ளிகள்

அங்கீகாரம் புதுப்பிக்காத 10,000 தனியார் பள்ளிகள்

அங்கீகாரம் புதுப்பிக்காத 10,000 தனியார் பள்ளிகள்


ADDED : பிப் 26, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 26, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் : தஞ்சாவூரில், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சங்க மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:

தமிழக அரசு தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு தனியாக இயக்குனரகம் அமைத்திருந்தாலும், டி.டி.சி.பி., மற்றும் எல்.பி.ஏ., ஆணை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால், 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் இதுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. டி.டி.சி.பி., அங்கீகாரம் நிபந்தனை இல்லாமல், மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஆணை வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டுக்கான தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தித்தின்படி, கல்விக்கட்டண தொகை 1,000 கோடி ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அந்தந்த கல்வி ஆண்டிலேயே இரண்டு தவணைகளாக வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் உள்ளது போல, கட்டாய கல்வி சட்டத்தின்படி எல்.கே.ஜி., - யு.கே.ஜி. மாணவர்களுக்கு அதிகபட்ச தொகை 6,000 ரூபாயை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். சுயநிதி பள்ளிகளின் புதுப்பித்தலை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை என உயர்த்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us