sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

/

10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


ADDED : ஜூலை 12, 2025 11:46 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளார்.

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 12) நடைபெற்றது. மொத்தம் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வர்கள் தேர்வை எழுதினர். சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றுக்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் சென்றார். அங்கு தேர்வு பணிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;

ஒரு மாதத்தில் குரூப் 1 முதல்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதன்மை தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். கேள்வித்தாள் தயாரிப்பின் போது அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக் கூடாது என்று வல்லுநர்களிடம் அறிவுரை வழங்கி உள்ளோம்.

இன்றைய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த 3 மாதத்தில் வெளியிடப்படும். அடுத்து வரும் நாட்களில் 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.

குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. வினாத்தாள் எதுவும் கசியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us