sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விமானத்தில் கோளாறு உயிர் தப்பிய 113 பயணியர்

/

விமானத்தில் கோளாறு உயிர் தப்பிய 113 பயணியர்

விமானத்தில் கோளாறு உயிர் தப்பிய 113 பயணியர்

விமானத்தில் கோளாறு உயிர் தப்பிய 113 பயணியர்


ADDED : ஏப் 05, 2025 02:54 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை, ரன்வேயில் விமானி கண்டுபிடித்ததால், 113 பயணியர் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 113 பயணியருடன் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானம் ரன்வேயில் சென்றபோது, இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை தெரிந்து கொண்ட விமானி, விமானத்தை மேலே எழுப்பாமல், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தினார்.

உடனடியாக, 113 பயணியரும் இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் பயணியர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

10 மணி நேர காத்திருப்புக்கு பின், நேற்று மதியம் 1.20 மணிக்கு புறப்பட்ட துபாய் விமானத்தில், பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us