sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்

/

கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்

கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்

கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்


ADDED : அக் 04, 2025 01:39 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''கரூர் துயரச் சம்பவத்தில், பொது மக்கள், த.வெ.க., தலைவர் விஜய், போலீஸ் துறை ஆகிய மூவரும் குற்ற வாளிகள்,'' என, காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

அவரது பேட்டி:

கரூர் துயரச் சம்பவத்திற்கு, 3 பேர் குற்றவாளிகள். முதல் குற்றவாளி பொதுமக்கள் தான். விஜய் என்ன தேவதுாதரா? எல்லாரையும் போல இரண்டு கண், ஒரு மூக்கு கொண்ட சாதாரண மனிதன் தானே. பல படங்களில் அவரை மக்கள் பார்த்திருப்பர். அப்படியே அவரை பார்க்க வேண்டும் என்றால், 'டிவி' நேரடி ஒளிப்பரப்பில் பார்த்திருக்கலாமே.

பெண்களும் கைக்குழந்தை களுடன் விஜய் பிரசார கூட்டத்துக்கு சென்றது, அரசியல் பேச்சு கேட் க அல்ல. விஜயை பார்க்கத்தான்.

விஜயை யாரும் அரசியல் தலைரவாக பார்க்கவில்லை. விஜய் என்ற காட்சிப் பொருளை கண்டு பரவச மடைய வேண்டும் என, விபரீதத்தைத் தேடிச் சென்ற, பொதுமக்கள் தான் குற்ற வாளிகள்.

இரண்டாவது குற்றவாளி விஜய். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்; சமுதாயத்துக்கு நல்லது செய்ய வரவில்லை.

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களை ஏன் பார்க்க செல்லவில்லை?

விஜய், கூட் டத்துக்கு தாமதமாக வந்தது தவறு. மக்களுக்கு சாப்பாடு, குடிநீர் வசதி செய்து தராமல் இருந்தது தவறு. எனவே, இரண்டாவது குற்றவாளி விஜய் தான்.

மூன்றாவது குற்றவாளி யாக, போலீஸ் துறை. முதல்வர் ஸ்டாலினுக்கு அதே கரூரில் பெரிய இடம் கொடுக்கப்பட்டது; விஜய்க்கு முட்டுச்சந்து கொடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க., நிர்வாகிகள் கேட்ட இடத்தை, போலீஸ் துறை மறுத்துள்ளது. காவல் துறை திட்டமிட்டு, இந்த சதியை செய்துள்ளதாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us